search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி மாவட்டம்"

    • மத்திய மந்திரியிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை
    • ஒப்பந்தத்தை இறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும்‌

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த், டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து ஒரு மனு அளித்தார்.

    அதில், காரோடு முதல் கன்னியாகுமரி வரை 4 வழிச்சாலை பணிகள் நடை பெற்று வந்த நிலையில், கல், மண் தட்டுப்பாடு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. பணி முடங்கிய காரணத் தால் ஒப்பந்தம் ரத்து செய்யப் பட்டது.

    பின்னர் மாநில அரசு அண்டை மாவட்டத்நிதின் கட்கரியை சந்தித்து ஒரு மனு அளித்தில் இருந்து மண் எடுப்பதற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து மீண்டும் இந்த பணிக்கான ஒப்பந்தத்திற்கு மறு டெண்டர் கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரம் விடப்பட்டது.

    இந்த டெண்டர் வருகிற 19-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்நாள் வரை டெண்டர் முடிவு செய்யப் படாமல் உள்ளது. பல்வேறு காரணங்களால் முடங்கி கிடக்கும் 4 வழிச் சாலை பணிகள் மீண்டும் தொடங்க தாமதமானால் இந்த சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது.

    எனவே இதை கருத்தில் கொண்டு தாங்கள் அலுவலகம் வாயிலாக நெடுஞ்சாலை துறையிடம் உடனடியாக 4 வழி சாலை பணிக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

    • விழிப்புணர்வு கூட்டத்தில் ஊழியர்களுக்கு அறிவுரை
    • போதை பொருட்கள் பயன்பாடுகள் கண்டறி யப்பட்டால் அது குறித்த தகவல்களை 7010363173 என்ற செல்லிடை பேசி எண்ணில் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

    பள்ளி-கல்லூரிகளில் மாணவர்களிடையே போதை பொருட்கள் தடுப்பது குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்திட, மாண வர்களை கொண்டு போதை பொருள் தடுப்பு குறித்து தொகுதி வாரியாக குழுமம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பள்ளி,கல்லூரி விடுதி களில் போதை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலருக்கும், மாவட்ட கல்வி அலுவலர்க ளுக்கும் கூட்டத்தில் அறிவு றுத்தப்பட்டது.

    கடலோர காவல் துறை, மீன்வளத்துறை, உதவி இயக்குநர் மற்றும் போதை பொருள் தடுப்பு அலுவலருடன் இணைந்து ஒவ்வொரு வாரமும் கடற்கரை பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு போதைபொருள்கள் வெளி இடங்களிலிருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசுத் துறையினரும் போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் அதனை தடுப்பத ற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    போதை பொருட்கள் பயன்பாடுகள் கண்டறி யப்பட்டால் அது குறித்த தகவல்களை 7010363173 என்ற செல்லிடை பேசி எண்ணில் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மனாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீரா சாமி, கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

    • அதிகாலையில் கொட்டிய பனியால் பொதுமக்கள் அவதி
    • தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக சுட்டெ ரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    காலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த நிலை யில் வங்க கடலில் உரு வாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தி ருந்தது.

    இந்த நிலையில் நேற்று மதியம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது.இரவு மாவட் டம் முழுவதும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரமாக இடைவிடாது கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.

    கன்னிமார், பூதப்பாண்டி, தக்கலை, இரணியல், ஆரல் வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைப் பகுதியிலும் மழை பெய்த தையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருவ தால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 1, பெருஞ்சாணி 6.8, பூதப்பாண்டி 12.6, கன்னிமார் 14.8, கொட்டாரம் 2.4, மயிலாடி 4.2, சுருளோடு 9, தக்கலை 6.2, குளச்சல் 2, இரணியல் 6.4, பாலமோர் 2.4, மாம்பழத்துறையாறு 13.6, கோழிப்போர்விளை 6.4, அடையாமடை 4.2, ஆணைக்கிடங்கு 11.4.

    இரவு மழை கொட்டி தீர்த்த நிலையில் இன்று அதிகாலையில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது.இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு ஆளா னார்கள். காலை 9 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்தது. இதையடுத்து 4 சக்கர வாகனங்கள் மற்றும் பஸ்களில் முகப்பு லைட்டுகளை எரிய விட்ட வாறு டிரைவர்கள் வாக னங்களை ஓட்டி சென்றனர்.

    பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் சிரமத்திற்கு ஆளானார்கள். கடும் குளிரையும் பொருட் படுத்தாமல் அவர்கள் பள்ளி களுக்கு புறப்பட்டு சென்ற னர். பனிப்பொழிவின் காரணமாக பெரியவர்கள் சளி தொல்லையால் அவ திப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    • கடந்த ஆண்டை விட இருமடங்கு இனங்கள்
    • அரிய வகை அமூர் வல்லூறுகள் இந்த ஆண்டு அதிகமாக காணப்பட்டன

    நாகர்கோவில்:

    ஆண்டுதோறும் 2 பருவ மழைகள் பெய்யும் குமரி மாவட்டத்தில் பெய்வதால், நீர் நிலைகள் நிறைந்து காணப்படும்.

    இதனால் இங்குள்ள சீதோஷ்ண நிலை, பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் குமரி மாவட்டம் வருவது வழக்கம்.

    அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை குமரி மாவட்டத்தில் வசிக்கும் இந்த பறவைகள், பிப்ரவரி மாதம் இங்கு இருந்து இடம் பெயரும். குமரி மாவட்டத்திற்கு ஆண்டு தோறும் வரும் பறவை இனங்கள் எவை? எத்தனை பறவைகள் வருகின்றன என்பதை வனத்துறை கணக்கெடுத்து வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு முதல் கட்டமாக 20 நீர் நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. மாவட்ட வன அதிகாரி இளையராஜா தலைமை யில் இந்த பணி நடைபெற்றது.

    சுமார் 50 பறவைகள் ஆர்வலர்கள், வனப்பணி யாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக பறவைகள் வந்திருப்பது உறுதியானது. கடந்த ஆண்டு 72 பறவை இனங்கள் வந்ததாக கணக்கெடுப்பில் உள்ளது.

    ஆனால் இந்த ஆண்டு அது இருமடங்காக அதிக ரித்து 163 பறவை இனங்கள் வந்திருப்பது தெரியவந்தது. குறிப்பாக ஊசிவால் வாத்து, நீல சிறகு வாத்து, தட்டை வாயன், பொன்னிற உப்பு கொத்தி, சாம்பல் உப்பு கொத்தி, பேதை உள்ளான், அறிவாள் மூக்கு மற்றும் ஏராளமான உள்ளுர் பறவைகளும் வந்துள்ளன.

    மொத்தம் 20 குழுக்களாக பிரிந்து நடத்திய இந்தக் கணக்கெடுப்பில் மொத்தம் 163 இனத்தைச் சேர்ந்த 10,094 பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன. குறிப்பாக அரிய வகை அமூர் வல்லூறுகள் இந்த ஆண்டு அதிகமாக காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல் சிவகுமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.
    • மதுரையில் வக்கீலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நாகர்கோவில்:

    தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல் சிவகுமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். மதுரையில் வக்கீலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதே போல குமரி மாவட்டத்திலும் 2 ஆயிரத்து க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். நாகர்கோவிலில் இன்று வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லவில்லை.மேலும் பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை மற்றும் பத்மநாப புரம் ஆகிய கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • ஏ.டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் அறிவுரை
    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போதைக்கு எதிரான பிரசாரத்தை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் நேற்று குமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவர் போலீஸ் அதிகாரிகளு டன் ஆலோ சனை மேற்கொண் டார்.

    அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஈஸ்வரன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலோசனையின்போது, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டம் கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்றப்பட வேண்டும். வெளி மாநிலங்க ளில் இருந்து கஞ்சா விற்பனைக்கு கொண்டு வரப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் அறிவுரை வழங்கினார்.

    அதோடு கஞ்சா மற்றும் போதைக்கு அடிமையான இளை ஞர்கள், மாண வர்களை மீட்கும் வகையில் காவல்துறையினர் விழிப்பு ணர்வு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டும் என்றும் கூறினார். மேலும் மாவட்டத்தில் போதை மீட்பு சிகிச்சை மையங்களுடன் காவல்துறையினர் இணைந்து செயலாற்ற வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போதைக்கு எதிரான பிரசாரத்தை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

    இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை அதிகப்படுத்த வேண்டும். மேலும் போதைக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ளும் வகையில் போட்டோ பாயின்ட் ஏற்படுத்தும் நிகழ்ச்சியையும் ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த போட்டோ பாயிண்ட், பல்வேறு முக்கிய இடங்களில் வைக்கவும், பள்ளி, கல்லூரிகளில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். மேலும் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் பறிமுதல் செய்த கஞ்சா வைக்கப்பட்டுள்ள குடோனையும் ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் பார்வையிட்டார்.

    • பேச்சிப்பாறை அணை பகுதியில் 3.6 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.
    • பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 539 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 20 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவிலும் மந்தமான வானிலையே நிலவி மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன.

    இதைத் தொடர்ந்து இரவில் பல இடங்களில் சாரல் மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், சாமிதோப்பு, ஆரல்வாய்மொழி, தோவாளை, மார்த் தாண்டம், குழித்துறை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மேலும் மலையோர பகுதி கள் மற்றும் அணை களின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

    இந்த மழை பேச்சிப்பாறை அணை பகுதியில் 3.6 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. மேலும் தக்கலை-4.2, கோழிப்போர்விளை-3.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. மழை காரணமாக சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது.

    இதற்கிடையே பேச்சிப்பாறை அணைக்கு வினா டிக்கு 539 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 20 கன அடி தண்ணீரும் வந்துகொண்டிருக்கிறது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 537 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 525 கன அடி தண்ணீரும் பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலையிலும் வெயில் அடிக்கவில்லை. வானில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.

    • ரெயில் நிலையம், கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பு
    • குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடக்கிறது.

    விழாவில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். இதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துடன் சென்று பார்வையிடும் கலெக்டர் அரவிந்த் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

    விழாவில் மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. குடியரசு தினத்தையொட்டி போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் இன்று நடந்தது. ஊர்க்கா வல் படையினர், ஆயுதப் படையினர், தேசிய மாணவர் படையினர், இந்த அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    குடியரசு தினத்தை யொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.இதற்கான ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

    குடியரசு தின விழா நடைபெறும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மைதானம் முழுவதும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சி ஊழியர்கள் அந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அங்கு பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    குடியரசு தினத்தை யொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட அறிவு றுத்தப்பட்டு உள்ளனர். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அங்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி காலணி வரை உள்ள கடற்கரை கிராமங்களி லும் பாதுகாப்பு பலப்ப டுத்தப்பட்டு உள்ளது. கடலோர காவல் படை போலீசாரும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, நாங்கு நேரி, வள்ளியூர், இரணி யல், குழித்துறை ரெயில் நிலையங்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • தனியார் நிறுவன தட்டச்சர் நந்தினி தனது தாயாரிடம் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்
    • பண்ணையார்விளை பகுதியைச் சேர்ந்த சகாய லூர்து பாப்பு மதுரைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் நீண்ட நாட்களாக வரவில்லை.1

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வட்ட விளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தினி (வயது 20). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தட்டச்சராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நந்தினி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் நந்தினியை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்க வில்லை.

    இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் நந்தினி தனது தாயாரை தொடர்பு கொண்டு வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    கொல்லங்கோடு அருகே சந்தனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்தி (18). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். வீட்டில் இருந்த நிஷாந்தி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது தாயார் மகள் நிஷாந்தியை தேடினார்.அப்போது வீட்டில் இருந்து சான்றிதழ்களுடன் அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவரது தாயார் ராணி கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம்மவுண்ட் பண்ணையார்விளை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார்.இவரது மனைவி சகாய லூர்து பாப்பு (31). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.சகாய லூர்து பாப்பு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.சம்பவத்தன்று மதுரைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்ற அவர் நீண்ட நாட்களாக வரவில்லை.இதையடுத்து சிவகுமார் மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    • பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான 26-ந் தேதி அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெ றுகிறது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11 மணி அளவில் நடத்திட வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.

    அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தேவையான விவரங்களை, அதிகாரிகள் இக்கிராம சபைக் கூட்டத்தில் வெளியிட வேண்டும்.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 180 மதுபாட்டில்கள் பறிமுதல்
    • அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    திருவள்ளுவர் தினத்தை யொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந் தது.

    குமரிமாவட்டத்தில் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்ட நிலையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கன்னியா குமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப் டிவிசன்க ளுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அனுமதி யின்றி மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் அனுமதி இன்றி மது விற்பனை செய்ததாக 15 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அனுமதியின்றி மது விற்ற 24 பேரை கைது செய்த போலீசார் அவர்களி டம் இருந்து 180 மதுபாட்டில் களை பறிமுதல் செய்துள்ள னர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

    • காலை மற்றும் மதியம் தங்களின் வருகையினை தவறாமல் என்.எம்.எம்.எஸ். செயலி வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே தாங்கள் பணிக்கு வருகை தந்தது உறுதி செய்யப்பட்டு ஊதியம் வழங்க இயலும்.
    • கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2021-2022-ம் நிதியாண்டு முதல் அனைத்து பணிகளும் நடைபெறும் இடங்களில் தொழிலாளர்களின் வருகை பதிவு 21-5-2021 முதல் இருமுறை என்.எம்.எம்.எஸ். செயலி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சக இயக்குனரின் கடிதத்தில் 1-1-2023 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தனிநபர் சொத்து உரு வாக்கம் பணிகளை தவிர்த்து அனைத்து பணித்தளத்தி லும் (20-க்கும் குறைவான தொழிலாளர்களை கொண்ட பணி கூட) என்.எம்.எம்.எஸ். செயலி மூலம் மட்டுமே வருகை பதிவு மேற்கொள்ள கட்டாய மாக்கப்பட்டு உள்ளது.

    மேலும் விலக்கு ஏதும் அளிக்கப்பட மாட் டாது எனவும், இதன் அடிப்ப டையிலேயே வருகை பதிவுகள் பதியப்பட்டு நிதி பரிமாற்ற ஆணை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக என்.எம்.எம்.எஸ். செயலி மூலம் வருகை பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணியாளர்களும் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) காலை மற்றும் மதியம் தங்களின் வருகை யினை தவறாமல் என்.எம்.எம்.எஸ். செயலி வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே தாங்கள் பணிக்கு வருகை தந்தது உறுதி செய்யப்பட்டு ஊதியம் வழங்க இயலும்.

    மேலும் இத்திட்டத்தின் குறைகள் தீர்ப்பதற்காக சத்தியசீலன் என்பவர் குமரி மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவருடைய செல்போன் எண்-8925811310, மின்னஞ்சல் முகவரி - Ombudsmankki@gmail.com ஆகும். எனவே பொதுமக்கள் மற்றும் திட்டத்தில் பணி புரிபவர்கள் திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறை தீர்ப்பாளரின் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக் கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×